• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் 46 தூய்மைப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு

November 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன.இதில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 6500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சியில் 2500க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக தூய்மைப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இதனிடையே கோவை மாநகராட்சியில் சினியரிட்டி அடைப்படையில் 34 தூய்மைப்பணியாளர்களுக்கும்,பதிவுறு எழுத்தர்கள் அடிப்படையில் 12 தூய்மைப்பணியாளர்களுக்கும் என மொத்தம் 46 தூய்மைப்பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 83 தூய்மைப்பணியாளர்கள் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க