• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியின் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாக்கத்தான்

November 16, 2022 தண்டோரா குழு

கோவையில் மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியின் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியின் சார்பில் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனவும்,போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாக்கத்தான் நடைபெற்றது.

இதனை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இதில் மாணவர் பேரவை தலைவர் குருசரண், எஸ்.டி தர்ஷன் தலைமை வகித்த இதில் பள்ளி தலைவர் ராஜேஷ் வாசுதேவன், நிர்வாகத் தலைவர் நந்தகிஷோர், மாணவர் மேம்பாட்டு துறை தலைவர் கீதா மற்றும் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று பதாகைகள் ஏந்திய படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க