• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

November 16, 2022 தண்டோரா குழு

போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி மின்சார துறை அமைச்சர் லங்கா கார்னர் பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு போர்கால அடிப்படையில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அமைச்சரின் உத்தரவிற்கிணங்க கோவை மாநகராட்சி பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக லங்கா கார்னரில் தூர்வாரும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க