• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரூர் பச்சாபாளையம் அருகே சோளக்காட்டுக்குள் ஏழு காட்டு யானைகள் – பொதுமக்கள் அச்சம்

November 9, 2022 தண்டோரா குழு

கோவை பேரூர் பச்சாபாளையம் அருகே குடியிருப்பு பகுதி ஒட்டிய சோளக்காட்டுக்குள் ஏழு காட்டு யானைகள் முகாமிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பேரூர் பகுதியில் ஒன்று. யானைகள் அவ்வப்போது இப்பகுதிகளில் உலா வருவதும், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் பச்சாபாளையம் அருகே உள்ள சோளக்காட்டுக்குள் ஏழு காட்டு யானைகள் நுழைந்தன.

யானைகள் மீண்டும் காட்டிற்குள் செல்லாமல் சோளக்காட்டிற்குள்ளே முகாமிட்டுள்ளதால் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். யானைகளை விரட்ட வனத்துறையினர் சோளக் காடு அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளனர். மூன்று குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதியில் உள்ள பகுதிக்குள் நுழைந்து விடும் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் யானைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்குள் நுழைந்திடாத வகையில் தொடர்ந்து யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க