• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே!-கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்

November 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர பகுதியில் சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் திமுகவினர் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

இதே போல கோவை ரயில் நிலையம் பகுதியில் மத்திய மாவட்டம் மக்கள் நீதி மயத்தினர் நவம்பர் 7ல் பிறந்தநாள் காணும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும் எனவும், மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே நம்மவரே! நீ வாழ்க பல்லாண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க