• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

November 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்க,43 மருத்துவக் குழுக்கள், அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கோவையின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்க,43 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அரசு மருத்துவமனையில்,காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,

பருவ மழையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கென, தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 2 ஐ.சி.யூ படுக்கைகளும் உள்ளன. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல், அருகில் உள்ள மருத்துவர்களை அணுக வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க