கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்க,43 மருத்துவக் குழுக்கள், அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கோவையின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்க,43 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அரசு மருத்துவமனையில்,காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,
பருவ மழையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கென, தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 2 ஐ.சி.யூ படுக்கைகளும் உள்ளன. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல், அருகில் உள்ள மருத்துவர்களை அணுக வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு