• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீவுத்திடல் அமைத்தல் பணியினை ஆய்வு செய்த ஆட்சியர், ஆணையாளர்

November 1, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் மாதிரி சாலையின் ஒருபகுதியாக மிதிவண்டி பாதை (Cycle Track), தாமஸ்பார்க் சந்திப்பில் மீடியா டவர் (Media Tower) அமைக்கும் பணிகள், மாதிரி திட்டச்சாலை பணியில் ஒருபகுதியாக தாமஸ் பூங்கா சந்திப்பு மற்றும் கிளப் சாலைகள் சந்திப்பு ஆகிய சந்திப்புகளை வடிவமைத்தல் மற்றும் தீவுத்திடல் அமைத்தல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர்.சுகந்தி, உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க