• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மக்கள் அச்சமடைய தேவையில்லை – ஆட்சியர் தகவல்

October 31, 2022 தண்டோரா குழு

கோவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கோவை மக்கள் அச்சம்பட தேவையில்லை என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி கார் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீசார் என அனைத்து துறைகளும் இணைந்து மாவட்டத்தில் உள்ள பதற்ற நிலையை போக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். போலீசார் சிறப்பாக செயல்பட்டு இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்தனர். இதன் காரணமாக கோவை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில்,

‘‘கோவையில் கார் வெடிப்பு தொடர்பாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன.

கோவை மக்கள் எந்த சலனமும் இன்றி இயல்பாக உள்ளனர். கோவை மக்கள் அச்சமடைய தேவையில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நிகழ்வுகள் கோவையில் அமைதியான முறையில் சிறப்பாக அமைந்தது. இதுபோன்ற சம்பவம் கோவை மாவட்டத்தில் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார்.

மேலும் படிக்க