• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கோட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம் திட்டம்

October 17, 2022 தண்டோரா குழு

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரம் முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘ கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என 4 மாவட்டங்களில் 2800க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை வரும் 24ம் கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து கோவை கோட்டத்தில் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, திருச்சி, கரூர், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து அதிகரிக்கப்படும்,’’ என்றார்.

மேலும் படிக்க