• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச ஜூனியர் மாடல் ஃபேஷன் ஷோ – கோவையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பங்கேற்பு

October 16, 2022 தண்டோரா குழு

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராணா சிவக்குமார் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இதையடுத்து, இந்த ஆண்டிற்கான
சர்வதேச அளவிலான பேஷன் ஷோ நிகழ்ச்சி விரைவில் துபாயில் நடைபெற உள்ளது. இந்த பேஷன் ஷோவில் சிறுவன் ராணா பயிற்சி அளித்த 2 சிறுவர்கள் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து சிறுவன் ரானாவின் தந்தை சிவக்குமார் கூறுகையில்,

துபாயில் வரும் அக்.18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பேஷன் ஷோவில் இந்தியா சார்பில் 7 சிறுவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 2 பேர் கோவையில் நானும் ராணாவும் பயிற்சி அளித்த மோஹித் இஷான்(4), திஷான் (6) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அங்கு 4 சுற்றுகள் நடைபெற உள்ளது. 4 முதல் 6 வயது பிரிவில் பங்கேற்க உள்ளனர்.இதில் வெற்றி பெறுபவர் இந்த ஆண்டிற்கான சர்வதேச ஜூனியர் மாடலாக தேர்ந்தெடுக்கப்படுவார். என தெரிவித்தார்.

மேலும் படிக்க