• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சிக் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா

October 14, 2022 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சிக் கல்லூரியில்நான்காவது பட்டமளிப்பு விழா PSG மாநாட்டு மையத்தில் கொண்டாடப்பட்டது.

பூ .சா. கோ & சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ எல் கோபாலகிருஷ்ணன், கூட்டத்தை வரவேற்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துரைத்தார். PSG iTech பிராந்தியத்திற்கும் நாட்டிற்கும் மாற்றத்திற்கான கருவியாக செயல்படுகிறது என்று அவர் கூறினார்.பல்வேறு துறையில் இருந்து பல்கலைக்கழக தரவரிசைப் பெற்ற இருபது ஐந்து பேருக்கும், பட்டம் பெற்ற 349 பேருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ரீ ஜிஏ ஸ்ரீநிவாச மூர்த்தி, சிறந்த விஞ்ஞானி மற்றும் யக்குனர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (DRDL), ஹைதராபாத், தொடக்க உரையை ஆற்றினார். அனைத்து பல்கலைக்கழக தரவரிசைப் பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர் வாழ்த்தினார்.

அதே நேரத்தில், அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்காகவும், அறிவைப் பகிர்ந்ததற்காகவும், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்த மிகவும் சவாலான காலங்களில் ஒரு பொறியியலாளரின் பங்கு மற்றும் பொறுப்புகளைப் பற்றி பேசுகையில்,வேலையில் ஆர்வம், நம்பிக்கை, போன்ற ஒரு வெற்றிகரமான பொறியியலாளராகத் தேவையான முக்கிய திறன்களை அடிக்கோடிட்டுக் காட்டினார். சமூகத்திற்கு பூ .சா. கோ & சன்ஸ் அறக்கட்டளையின் பங்களிப்புகளை அவர் பாராட்டினார்.

மேலும் படிக்க