• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சமையல் மாஸ்டரிடம் பணம் பறிப்பு

October 14, 2022 தண்டோரா குழு

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஷிக்குள் அல் இஸ்லாம் (வயது 20). இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சைனிஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றார்.

பெரியக்கடை வீதி லங்கா கார்னர் பாலம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் அஷிக்குள் அல் இஸ்லாமிடம் செல்போன் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து அஷிக்குள் அல் இஸ்லாமை தாக்கினர்.பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை பறித்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் படிக்க