• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 4 ஆயிரம் வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்க திட்டம்

October 11, 2022 தண்டோரா குழு

ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாவட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில்,

‘‘கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களிடையே இரும்பு சத்து குறித்தும், ஊட்டச்சத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இரும்பு சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படலாம்.அதனை தடுக்க வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் கீரை வகைகள், முருங்கை மற்றும் சத்து மிகுந்த காய்கறி வகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்’’ என்றார்.

மேலும் படிக்க