• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷா, காருண்யா நிறுவனங்களின் கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்

October 10, 2022 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் சிபிஎம் அலுவலகத்தில் சி.பி.எம்., காங்கிரஸ்,சி.பி.ஐ, மதிமுக, விசிக, தபெதிக மற்றும் அம்பேத்காரிய, பெரியாரிய அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் சுற்று சூழல் அனுமதி இன்றி லட்சகணக்கான சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஈஷா, காருண்யா நிறுவனங்களின் கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இதை எதிர்த்து 16 ம்தேதி ஆலாந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக சிபிஎம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கோவை மக்களிடையே மதநல்லிணகத்தை ஏற்படுத்தும் விதமான நாளை மனித சங்கிலி நடைபெற்வுள்ளது.இதில் 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். மேலும் கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் மற்றும் காருண்யா கல்வி நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டி இருப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16 ம் தேதி அனைத்து கட்சி சார்பில் ஆலந்துறை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் 500 சதுர அடியில் அனுமதி இன்றி கட்டிடம் கட்டி இருந்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இந்த நிறுவனங்கள் 10 லட்சம் சதுர அடிக்கும் மேலான இடங்களில் எந்த அனுமதியும் இன்றி கட்டிடங்கள் கட்டியுள்ளனர். மலையடிவாரத்தில் உயிர் சூழலை பாதிக்கும் வகையில் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் 20 கி.மீ சுற்றளவில் யானைகள் வழிதடம் பாதிக்கப்பட்டு அவை தடம் மாறுகின்றன. இந்த ஈஷா, காருண்யா நிறுவனங்களுக்கு சுற்று சுழல் அனுமதி அளிக்க கூடாது, அனுமதி இன்றி கட்டப்பட்ட ஈஷா, காருண்யா நிறுவனங்களின் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் படிக்க