• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குப்பைகள் கொட்டுபவர்களை கண்காணிக்க உத்தரவு

October 7, 2022 தண்டோரா குழு

தெருக்களில் குப்பைகளை கொட்டும் நபர்களை சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 28வது வார்டுக்குட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டாமல் குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பின்னர் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களிடம் அப்பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என முறையாக தினமும் சேகரிக்கப்பட்டு வருகிறதா? என ஆய்வு செய்தார்.மேலும் தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவாரம்பாளையம் பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் உள்ள குப்பைகள், செடி, கொடிகளை போர்கால அடிப்படையில் தூர்வார உத்தரவிட்டார். பின்னர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ)விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க