• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

October 5, 2022 தண்டோரா குழு

விஜயதசமி தினமான இன்று கோவை மாவட்டம் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கல்விப் பணியினை தொடங்கினர்.

விஜயதசமி தினமான இன்று கல்வி பணியை துவங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை. இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று வித்யாரம்பம் நிகழ்வானது நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர். பச்சரிசியில் ஓம் கணபதி என எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்விப் பணியைத் துவங்கினர்.

மேலும் படிக்க