• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிலத்தை மீட்டு தருமாறு ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி ஐஜியிடம் மனு

October 3, 2022 தண்டோரா குழு

கோவை ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகோத்தமன்.தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில்,
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு
கோவையை அடுத்த நல்லட்டிபாளையம் பகுதியில் தமக்கு சொந்தமான சுமார் ஆறு கோடி மதிப்புள்ள நான்கு ஏக்கர் நிலத்தை சிலர் உள்ளூர் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து அபகரித்து உள்ளதாக கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்பு நிலத்தை பிரித்து விற்பனை செய்ய இருபத்தி எட்டு இலட்சம் ரூபாய் தாம் கடனாக பெற்றதாகவும்,இதற்கு அடமானமாக அசல் பத்திரங்களை வாங்கிய சில நாட்களிலேயே பத்திரம் வேறோருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகாவும், இது குறித்து பல முறை காவல் துறை,முதல்வர் தனி பிரிவு,உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பலரிடம் இது குறித்து கூறியும் கடத்த இரண்டு வருடங்களாக தாம் அலைகழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

இந்த மனு வழங்க வந்த பாதிக்கப்பட்ட ரகோத்தமனுடன் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எஸ் ராமநாதன்,மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க