• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை

September 30, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஹெபீப்ரகுமான் என்பவரது மகன் மைதீன் (20) என்பவர் கடந்த 10.11.2020 -ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால் மைதீன் (20) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு கோவை மாவட்டம் கோவை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று குற்றவாளி மைதீனுக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் பச்சண்ணன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

மேலும் படிக்க