• Download mobile app
01 Aug 2025, FridayEdition - 3460
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்து முன்னணி நிர்வாகியின் கார் தாக்கப்பட்ட விவகாரம் – இந்து முன்னணி நிர்வாகி 2 பேர் கைது

September 27, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பத்ரிநாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

இன்று மேட்டுப்பாளையம் மகாலிங்கபுரம் பகுதியில்இந்து முன்னணியை சேர்ந்த ஹரீஷ் என்பவரின் கார் தாக்கப்பட்ட வழக்கு சம்மந்தமாக அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி தமிழ்ச்செல்வன் (24), அவரது நண்பர் ஹரிஹரன் (25.) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியின் போது முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சிசிடிவி பதிவுகள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான காரணம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.சுழற்சி முறையில் இரவு பகலாக மாவட்டம் முழுவதும் 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் இரண்டு பிளைவுட் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில்கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

மேலும் படிக்க