• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாலையத்தில் இந்து இளைஞர் முன்னணியின் நகரத்தலைவரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள்

September 27, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜ் நகரைச்சேர்ந்தவர் ஹரீஷ். இவர் பி எஸ் சி ஐ டி பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இவரின் தந்தை வேல்முருகன் பேருந்தில் நடந்துனராக பணிபுரிந்து வருகிறார். ஹரீஷ் இந்து இளைஞர் முன்னணியின் மேட்டுப்பாளைய நகரத்தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ காரின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்துள்ளனர்.இதனையடுத்து காலையில் காரை பார்த்த ஹரீஷ்,இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர், கார் கண்ணாடி உடைந்த பகுதிகளை பார்வையிட்டு, அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க