• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு – தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனை

September 24, 2022 தண்டோரா குழு

கடந்த இரு நாட்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

இதையடுத்து, கோவையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ,மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கோவை எஸ்.பி.பத்ரி நாராயணன் ஆகியோருடன் காணொளி காட்சி வாயிலாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் படிக்க