• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் வாந்தி மயக்கம்

September 20, 2022 தண்டோரா குழு

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ளது பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் இன்று காலை எட்டுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்குள்ள ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அதன் பின்னர் மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பினர். இந்த மாணவிகள் எதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவிகள் அருகில் உள்ள கடைகளில் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டார்களா அல்லது பள்ளியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரில் பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 8 கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவிகள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

அந்த பள்ளிக்கு மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு நடத்தினர். இதனால் அந்த பள்ளியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க