• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி தொல்லையால் தீக்குளிக்க முயற்சி

September 19, 2022 தண்டோரா குழு

கோவை அன்னூர் பதவாம் பள்ளியை சேர்ந்த ராமசாமி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் மேலில் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்னூர் பகுதியை சேர்ந்த கைத்தறி வேலை செய்து வரும் ராமசாமி அந்த பகுதியில் உள்ள கந்து வட்டி ஜெயராம் என்பவரிடம் ரூபாய் 3 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார். பின்பு வாங்கிய 3 லட்சம் ரூபாய் வட்டியுடன் சேர்த்து 5 லட்ச ரூபாயாக திருப்பி அளித்துள்ளார்.

ஆனால் கந்துவட்டி கடன் கொடுத்த ஜெயராமன் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதால் இந்த தீக்குளிக்கும் முடிவை எடுத்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறுகையில் தொடர்ந்து கந்துவட்டி ஜெயராமன் என்பவர் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப் பட்டுள்ளது. ஆனாலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் வேறுவழியின்றி இந்த தீக்குளிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

பின் அங்கே காவலர்கள் தீ குளிக்க முயன்ற ராமசாமியை தடுத்து நிறுத்தி அவர் மேல் தண்ணீர் ஊற்றி எந்த வித அசம்பாவித சம்பவங்கள் இல்லாமால் காப்பாற்றினார்.

மேலும் படிக்க