• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டுமனை பட்டா கேட்டு தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை

September 12, 2022 தண்டோரா குழு

கோவையில் வீட்டுமனை பட்டா கேட்டு 300க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை வின்சென்ட் ரோடு பகுதியில் வசித்து வந்த 350 குடும்பங்களுக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அவர்கள் குடியிருந்து வந்த ஹவுசிங் யூனிட் கட்டிடம் ஆனது பூமிக்குள் புதையுண்டு பெரும் விபத்துக்குள் ஆனது.அதை அடுத்து அப்போதைய திமுக அரசு 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்களையும் ஹவுசிங் யூனிட் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றி கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

அதே நேரத்தில் அந்தப் பகுதியில் குடியிருந்த மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி தராமல் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.மேலும் கடந்த 15 ஆண்டுகளாக இருப்பிடம் இன்றி வாழ்வாதாரம் இழந்து வருவதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் 15 வருடங்களாக வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து சிரமப்பட்டு வரும் மக்களுக்கு உடனடியாக மாநில அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக மாற்று வீடு ஒதுக்கி உதவிட வேண்டும் என்று மாநில அரசிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க