• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க கோரிக்கை

September 12, 2022 தண்டோரா குழு

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வழங்கிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்.

வருகின்ற 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்களை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈசுவரன் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வழங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார். தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியவரே பேரறிஞர் அண்ணா தான் என தெரிவித்த அவர் தமிழக முதல்வரும் தங்களது இந்தக் கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க