• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருமத்தம்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

September 10, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை சோமனூர் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது இதனையடுத்து சோமனூர் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை மாற்றப்படுவதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது டாஸ்மாக் கடையை ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் பாஜக அதிமுக கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சியினரும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்தநிலையில் சோமனூர் சாலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று எடுக்கப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு புதிதாக அமைய உள்ள மதுபான கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் வட்டாட்சியர் அலமேலு மங்கை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இப்போதைக்கு டாஸ்மாக் கடை மாற்றப்படாது என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் போராட்டம் தீவிரமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க