• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 120 அடி கிணற்றில் பாய்ந்து கார் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

September 9, 2022 தண்டோரா குழு

கோவை – சிறுவாணி சாலையில் உள்ள கிளப்பில் நேற்று இரவு ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு காலை வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன்(18) தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில்(Suzuki Iszusu) நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் தென்னநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்தது. முன்னதாக இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் கதவை திறந்து வெளியே விழுந்து விட உடன் வந்த நண்பர்கள் ஆதர்ஷ்(18),விவேக்பாபு(18),நந்தனன்(18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்றவர்கள்.

இந்த விபத்தில் வடவள்ளி சேர்ந்த பகுதியைச் சேர்ந்த ஆதேஷ், ரவி மற்றும் நந்தனன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த படுகாயம் அடைந்த ரோஷன் என்பவரை காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், 3 பேரின் உடலை கிணற்றிலிருந்து எடுத்து பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளனர். மேலும் அந்த வாகனத்தை கயிறு கட்டி மேலே இழுக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க