• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடக்கு மண்டல பகுதிகளில் தூய்மை பணிகள் குறித்து மேயர் ஆய்வு

September 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் தூய்மை பணிகள் மற்றும் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 20வது வார்டுக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் பூங்கா ஆகியவற்றை ஆய்வு செய்த மேயர் கல்பனா ஆனந்தகுமார் அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் 26வது வார்டுக்குட்பட்ட பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் பணிகளையும், குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தின் எடைகளை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் பணிகளையும் மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் (பொ) ஷர்மிளா, வடக்கு மண்டல குழு தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர் மோகனசுந்தரி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க