• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தொழில் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு

September 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட நஞ்சே கவுண்டர் வீதி,டிவிஎஸ் நகரில் தனியார் ஆஸ்பெஸ்டாஸ் தொழில் நிறுவனமும், தனியார் இன்ஜினியரிங் தொழில் நிறுவனமும் செயல்பட்டு வந்தன. தனி நபர் ஒருவரின் புகாரின் பெயரில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த 2 தொழில் நிறுவனங்களும் இயங்க தடை விதித்து சீல் வைத்தனர்.

மேலும் இயந்திரங்களை வெளியில் வைத்து சீல் வைத்துள்ளதால் இயந்திரங்கள் மழையில் நனைந்து வருகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சிறு,குறு தொழில் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரனிடம் 2 தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்கக்கோரி தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் சிறு, குறு தொழில் அமைப்பினர் மனு அளித்தனர்.

இது குறித்து ஜேம்ஸ் கூறுகையில்,

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைத்தது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். இது தொடர்பாக கலெக்டர் கூறும் பொழுது மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய அனுப்புகிறேன். அவர்கள் ஆய்வுக்கு பின் அளிக்கும் அறிக்கை பெற்ற பின் நடவடிக்கை எடுக்கிறேன்.

அதனை தொடர்ந்து குறுந்தொழில் முனைவோர்களும் உன்மை நிலை அறிந்து உதவிட கோரிக்கை வைத்துள்ளோம். மக்களுக்கு இடையூறு எதுவும் இல்லாத பட்சத்தில் தனி நபர் ஒருவரின் புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது எங்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. மக்களுக்கு இடையூறு இல்லை என்றால் உடனடியாக தொழில்நிறுவனங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார் என்றார்.

மேலும் படிக்க