• Download mobile app
02 Aug 2025, SaturdayEdition - 3461
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை முந்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

August 31, 2022 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை அருள்மிகு முந்தி விநாயகர் கோயிலில் நான்கு டன் மலர்களால் விநாயக பெருமானுக்கு மாப்பிள்ளை ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை அமைந்துள்ள திருக்கோவில்.19 அடி உயரம் 10 அடி அகலத்துடன் சுமார் 190 டன் எடை கொண்ட விநாயக பெருமானுக்கு இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதல் அபிஷேகம் நடத்தப்பட்டது.

சுமார் ஒன்றரை மணி நேரம் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சுமார் நான்கு டன் எடையில் பல்வேறு வகை மலர்களால் விநாயக பெருமானுக்கு சிறப்பு மாப்பிள்ளை ராஜ அலங்காரம் செய்யப்பட்டதுடன் 36 வகை நெய்வேத்தியங்களுடன் வழிபாடு நடத்தப்பட்டது.அதிகாலை 5 மணி முதல் நடைபெற்று வரும் அபிஷேக அலங்காரத்தை காண அதிகாலை மூன்று மணி முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்து அருள்மிகு விநாயக பெருமானின் அருள் பெற்றனர்.

மேலும் படிக்க