• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடையை மாற்ற கோரி ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

August 22, 2022 தண்டோரா குழு

டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கே.என்.ஜி புதூர் பொதுமக்கள் பாதைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை தடாகம் சாலை, கே.என்.ஜி புதூர்- மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை கோரி கே.என்.ஜி புதூத், எம்.ஜி.ஆர் நகர் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுபான கடையினால் பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் அதனை அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேசிய அவர்கள்,

அரசிற்கு மதுபான கடை முக்கியமா அல்லது மக்களின் நலன் முக்கியமா என கேள்வி எழுப்பினர்.பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர்.

மேலும் படிக்க