• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சந்திரா மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு பள்ளியில் நூலகம் திறப்பு

August 15, 2022 தண்டோரா குழு

சந்திரா மெட்ரிக் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

75வது சுதந்திர தின விழா மற்றும் சந்திரா மெட்ரிக் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் புத்தக கருவூலம் திறப்பு விழா நடைபெற்றது. சந்திரா மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் ர.நந்தினி அறிவுறுதலின்படி, சந்திராா மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா புத்தக கருவூலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தங்களது பள்ளியின் 25 வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு முதல் சேவை திட்டமாக மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு நூலகம் வசதி ஏற்படுத்தி கொடுக்க பள்ளியின் தாளாளர் அறிவுறுத்தினார். அதன்படி மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை எங்களது கல்வி நிறுவனம் சார்பில் 1500 க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டு ஒரு நூலகமாக அமைத்து கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சந்திரா மெட்ரிக் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஷிலா, மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி, மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுகுணா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க