• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

August 8, 2022 தண்டோரா குழு

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேர நீட்டிப்பு அரசாணையை மாற்றக்கோரி கோவை அரசு மருத்துமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் பணி நேரத்தை 40 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக நீட்டிக்கும் அரசாணை என் 225ஐ மாற்றக் செய்ய கோரியும், கடந்த 2009 முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 339 ஐ தொடர வேண்டும் என வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை, மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் சங்கத்தினர் கூறும்போது,

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாக தமிழக அரசு பாராட்டியது, இந்தியாவிலேயே தமிழகத்தில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றியதாக ஒன்றிய அரசும் தெரிவித்தது. இவ்வாறு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கான பரிசா இந்த பணி நேரம் நீண்டிப்பு, மேலும் இம்மாதிரி 40 மணி நேரத்தை 48 மணி நேரமாக பணி நீட்டிப்பு செய்வதால் மருத்துவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது.

எனவே கலைஞர் கொண்டு வந்த பழைய அரசாணையையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க