• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக அளவில் முதன் முறையாக சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் அறிமுகம்

August 8, 2022 தண்டோரா குழு

நவீன தொழில் நுட்பத்துடன் எரிபொருள் விரையம் தடுப்பு, மின்னணு முறையிலான சக்தி உபயோகம் , அதிக திறனுடன் இஞ்ஜின் இயங்கும் விதமாக வடிவமைத்த கோவை புல் நிறுவனம்

நிலங்களை தரிசாக்க , குழி தோண்ட, மண் எடுக்க உள்ளிட்ட தரிசு பணிகளுக்கு பணி ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகின்றன. மெசின்களை வைத்து பணிகளை செய்தாலும் எரிபொருள் விலை விண்ணை தொட்டதனால் மெசின்களை பயன்படுத்தவும் பொதுமக்கள் நெருக்கடியில் தயங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்று சொல்வது போல குறைந்த எரிபொருளில் அதிக பயன்பாடுகளை கொண்ட மெசின் அறிமுகமாயிரிருக்கின்றன. கோவை தொழில் நிறுவனங்களில் டிராக்டர் தயாரிக்கும் நிறுவனமான “புல் மெசின்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனம் BACKHOE LOADERS – களை (பின்புறம் தோண்டி முன்புறம் பாரம் சுமப்பது) உற்பத்தி செய்து வருகின்றது.

இந்த நிலையில் தரமான நீடித்து உழைக்கும் வல்லமை பொருந்திய தயாரிப்புகளை தந்துவரும் புல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ”சூப்பர் ஸ்மார்ட்” (SUPER SMART) மாடலை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். 75 HP கிர்லோஸ்கர் இன்ஜின் பொருத்தப்பட்டுருக்கின்றது. இதில் பொருத்தப்பட்டிருக்கின்ற பிஸ்டன் பம்ப் தேவையான அளவு சக்தியை மட்டுமே உபயோகித்து இயங்கும் வண்ணம் மின்னணு முறையில் (ELECTRIC SYSTEM) வடிவமைக்கப்பட்டு செயல்படுகின்றது.

இந்த நவீன தொழில் நுட்பத்தினால் இயந்தியரம் இயங்க தேவையான எரிபொருள் கட்டுப்படுத்தப்பட்டு எரி சக்தி விரையம் தடுக்கப்படுகின்றன. இதனால் பெருமளவில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் சேமிக்க முடியும். நவீன தொழில் நுட்பத்தினை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட கிரிஸ்லாக்கர் இன்ஜின், மாறுபட்ட கோணங்களில் இயங்ககூடிய ஸ்டேரிங், 40 கிலோ மீட்டர் வேகம் வரை இயங்கும் விதாமாக வடிவமைப்பு, ஒத்திசையில் இயங்கும் கியர்பாக்ஸ், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓட்டுநர் கூண்டு , வேலைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு பக்கெட்டுகளை மாற்றி இணைக்கும் வசதி, அதிக வலுவையும் அழுத்ததினையும் தாங்கும் விதமான வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுன் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இப்படிப்பட்ட தனித்துவமான சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த சூப்பர் ஸ்மார் பேக்ஹோ லோடர் உலகின் எந்தவொரு தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பேக்ஹோ லோடருடன் தர செயல்பாடு பயன் ஒப்பிட்டு செய்து பார்க்கலாம் என்று சூப்பர் ஸ்மார்டை தயாரித்து பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்காக பொதுவெளியில் அறிமுகப்படுத்தியிருக்கின்ற புல் நிறுவனம் சவால் விட்டிருக்கின்றது. அதிகரித்து வரும் வேலை ஆட்கள் பற்றாக்குறைக்கு இந்த மெசின் செயல்பாடுகள் பயனுள்ள மெசின் என் தெரிவித்திருக்கின்றனர்.

புல் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தரமான டிராக்டரோடு இணைக்கப்படும் உபகரணங்கள் , கட்டுமானத் துறைக்கான இயந்திரங்கள் , மின்சாரத்தால் இயங்குகின்ற இயந்திரங்கள் என மூன்று வகையான இயந்திரங்களை 3 தொழிற்ச்சாலைகளின் மூலமாக தாயாரித்து சந்தைக்கு வருகின்றன. 250 பொறியியல் வல்லுநர்கள் , 1000 கைதேர்ந்த தொழிலாளர்களின் கடின உழைப்பால் உதயமாகும் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் 76 விற்ப்பனை கூடங்களில் விறக்கப்படுகின்றன. உள்நாட்டில் பலராலும் ஈர்க்கப்பட்ட நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிநாடு வாடிக்கையாளர்களாலும் ஈர்க்கப்பட்டு 55 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

புல் நிறுவனம் டிராக்டரோடு இணைக்கப்படும் உபகரணங்களின் விற்பனையில் 46 ஆயிரம் வாடிக்கையாளர்களுடன் இந்தியாவிலேயே முதல் இடம் பிடித்து அசத்தியிருக்கின்றது. பேக்ஹோ லோடர்களின் உற்பத்தியிலும் புல் நிறுவனம் இந்திய அளவில் மூன்றாமிடம் வகித்து வரும் நிலையில் முதலிடத்தை நோக்கி முன்னேரி வருகின்றனர். இந்த நிலையில் உலக தரத்தில் பேக்ஹோ லோடரை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கின்றனர்.

மேலும் படிக்க