• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெம் மருத்துவமனையில் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு அறிமுகம்

August 7, 2022 தண்டோரா குழு

ஜெம் மருத்துவமனையில்ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு அறிமுகம்
மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.

கோவை ஜெம் மருத்துவமனையில் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையத்தை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ரோபோடிக் சிகிச்சை முறை மிகவும் வரவேற்கதக்கது. ரோபோடிக் கருவிகளை நாம் வெளியில் இருந்து வாங்கிறோம். இது போன்ற கருவிகள் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். நம் நாடு கொரோனா காலகட்டத்தை மிகவும் சிறப்பாக கையாண்டது. ரோபோடிக் சிகிச்சை முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, ரோபோடிக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்தவாறே ரோபோடிக் கருவிகளை பல்வேறு இடங்களிலும் இயக்கி பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ரோபோடிக் கருவிகளை காண்பதற்கும் அதன் தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்வதற்கும் மருத்துவமனை நிர்வாகம் உதவ வேண்டும். அப்போது தான் மாணவர்கள் புதிதாக பல தொழில்நுட்பங்களை கண்டறிய உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, மருத்துவமனை சிஇஓ, இணை இயக்குனர் பீரவின் குமார், ஐஎஸ்ஒ தலைவர் ராஜேந்திர டோபிராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க