• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு சார்பாக நீதி வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்.

April 1, 2016 வெங்கி சதீஷ்

தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் மோசடி புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் பி.ஆர்.பழனிசாமி என்பவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அவருக்குச் சாதகமாக நீதிபதி மகேந்திர பூபதி செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பஷீர் அகமது, சரவணன் ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழு நேற்றும் இன்றும் விசாரணை நடத்தினர். இதில் மகேந்திரபூபதி வலக்கை முழுமையாக விசாரிக்கவில்லை எனவும் ஒருதலைபட்சமாக செயல்பட்டார் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் இன்று அதிரடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக பாரதிராஜா என்ற நீதிபதியையும் நியமித்து நீதிபதிகள் குழு உத்தரவு பிறப்பித்தது.

ஒரு நீதிபதி குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்ட சம்பவம் நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க