• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் ஆட்சியரிடம் மனு

August 1, 2022 தண்டோரா குழு

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம்
சுந்தரம்வீதி CTDகாலனியில் சுமார் 80 வீடுகளில் தூய்மை பணியை பிரதானமாக செய்துவரும் பட்டியல் இன மக்கள் வாழ்ந்து வந்தனர்.

அந்த மக்களுக்கு சுமார் 80 வீடுகள்
ஒதுக்கீடு செய்து கடந்த 6.11.2019 ஆம் தேதி அன்று டோக்கன் மற்றும் வீடு ஒதுக்கீடு ஆணையங்கள் வழங்கப்பட்டது. வீடு ஒதுக்கீடு செய்வதற்கு கட்டணமாக ரூ.1,00,000
செலுத்த வேண்டும் என்று ஒதுக்கிவிட்டு ஆணையத்தில்குறிப்பிடப்பட்ட இருந்ததாக
சுமார் 50 குடும்பங்கள் அந்த
ஒரு லட்சத்தை செலுத்தியுள்ளனர். ஆனால், தற்போது வீடு வழங்காமல் ஒதுக்கீட்டு ஆணை (ALLOTMENT ORDER ) செல்லாது என கூறி மக்களை ஏமாற்ற குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிவுறுத்தலின் படி இன்று பா.ஜ.க கோவை மாநகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் ஜெ.சி.விவேக் தலைமையில் மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் வி.ஜோதி மற்றும் மாவட்ட செயலாளர் ராஜரத்தினம் மற்றும் ஆர்எஸ் புரம் மண்டல் தலைவர் சிபிகவிதா ஆகியோர் முன்னிலையில் பாதிக்கபட்ட மக்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது
இதில் மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க