• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர் குளத்திற்குள் கழிவுநீர் வராமல் தடுக்க திட்டம் தயாரிக்கப்படும்

July 30, 2022 தண்டோரா குழு

சிங்காநல்லூர் குளத்திற்குள் கழிவுநீர் வராமல் தடுக்க வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளோடு கலந்தாலோசித்து திட்டம் தயாரிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் கோவை மாநகராட்சி மற்றும் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மையம் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர், பல்லுயிர், சுற்றுச்சூழல், இயற்கை மற்றும் காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் துவங்கி வைத்தார்.

பின்னர் மாநகராட்சி கமிஷனர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

இப்பயிற்சியானது இயற்கையான இடங்களில் ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளியின் 30 முதல் 35 மாணவ, மாணவிகள், 2 ஆசிரியர்கள் கொண்ட குழுவாக அமைக்கப்பட்டு ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சிங்காநல்லூர் குளக்கரையில் நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடந்து செல்லும் வழியில் தண்ணீர், பல்லுயிர், சுற்றுச்சூழல், இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் இயற்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சியை மூன்று மாதத்திற்கு ஒருமுறை சுழற்சி கால அட்டவணை படி நடத்தப்படவுள்ளது. சிங்காநல்லூர் குளத்திற்கு பல நாடுகளிலிருந்து பலவகையான பறவைகள் வந்து செல்கின்றன. பலவகையான வண்ணத்துப்பூச்சிகளும் உள்ளது. இயற்கை சூழல் நிறைந்த சிங்காநல்லூர் குளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கழிவுநீர் குளத்திற்குள் வராமல் தடுக்க இயற்கையான முறையில் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளோடு கலந்தாலோசித்து திட்டம் தயாரித்து அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஆகாயத்தாமரைகளை அகற்ற புதிய நடவடிககைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் சிங்காநல்லூர் குளத்தை பார்வையிட்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிங்காநல்லூர் குளத்திற்கு வரும் ராஜவாய்க்கால்வாய் மற்றும் பெரிய குளம், வாலாங்குளம் வழியாக வரும் கால்வாயும் உடனடியாக தூர்வாரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி கமிஷனர் முத்து ராமலிங்கம், சுகாதார அலுவலர் முருகா, மதுக்கரை வன சரகர் சந்தியா, மதுக்கரை வனவர் ஐயப்பன், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க