• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு.

July 27, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, பழுதடைந்த இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து பேருந்துகளும் நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணிக்க வேண்டுமெனவும், மேலும் குடிநீர், கழிவறை, மின்வசதி, இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் மேற்கு மண்டலம் சேகர், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சமுத்திரகனி, அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் செந்தில், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

மேலும் படிக்க