• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிய வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

July 26, 2022 தண்டோரா குழு

கோவை புதூரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிய வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜே.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன்.அவரது நிறுவனம் கட்டி வரும் கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அந்நிறுவனம் சார்பில் கோவையில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் உரிய அனுமதி பெற்று கட்டுப்பட்டுள்ளதா என்றும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதாக என்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கோவைபுதூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் ல்ஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்ட போது ஜே.ஆர்.டி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க