• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரெடாய் கோவை அமைப்பின் சார்பில் கோவையில் ஃபேர்புரோ 2022 கண்காட்சி

July 26, 2022 தண்டோரா குழு

கிரெடாய் கோவை அமைப்பின் சார்பில் கோவையில் ஃபேர்புரோ 2022 கண்காட்சி ஜுலை 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.

2022 – கிரெடாய் கோயம்புத்தூர், நடத்தும் ஃபோர்புரோ மெகா ரியல் எஸ்டேட் கண்காட்சி, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வீடு வாங்குவோர் மற்றும் வங்கியாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. வீடு வாங்க விருப்பம் உள்ள ஒவ்வொருவரும் தமது பட்ஜெட், இருப்பிடம் மற்றும் தேவைக்கு ஏற்ப தனக்கேற்ற கனவு இல்லத்தை தேர்ந்தெடுக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் வீடு அல்லது வீட்டு மனைக்கு உடனடிக் கடன் வசதி அளிக்க பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் இதர வங்கிகள் ஸ்டால்களை அமைத்துள்ளன. இந்தக் கண்காட்சிக்கு ஒவ்வொரு வருடமும் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

இது குறித்து கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, செயலாளர் ராஜீவ் ராமசாமி, கண்காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, துணை பொது மேலாளர் மண்டல அலுவலக மேலாளர் இன்பரசு ஆகியோர் கூறியதாவது

கோவை கிரெடாய் சார்பில் 12வது முறையாக கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சியை கொடிசியா வளாகத்தில் வரும் ஜுலை 29 முதல் 31-ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், 75-க்கும் மேற்பட்ட ரெரா (RERA) அங்கீகாரம் பெற்ற புராஜெக்ட்களை காட்சிப்படுத்துகின்றனர்.

மேலும் இக்கண்காட்சியல் 5 வங்கிகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையாளர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பகள் முதல் ஹாலிடே வில்லாக்கள், கேட்டட் கம்யூனிட்டிகள், வீட்டு மனைகள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் வரை இக்கண்காட்சியில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ள புராஜெக்டுகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் புராஜெக்;ட்டுகளும் உள்ளன.சமீப காலங்களில் அதிக சொகுசு கொண்ட வீடுகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் வீட்டு மனைகளுக்கும் அதிக அளவு வரவேற்பு உள்ளது.

கட்டுமானத்தின் செலவு அதிகரித்திருந்தாலும் சொத்து வாங்குவதற்கான தேவை அதிகரித்து வருகிறது.மேலும் பல முதலீட்டார்கள் ரியல் எஸ்டேட் துறையில், குறிப்பாக சிறிய நகரங்களில் அதிக லாபம் உள்ளதால், வணிகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். மேற்படி காரணங்களால் நமது பகுதியில் ரியல் எஸ்டேட் துறை பெறும் வளர்ச்சி கண்டு வருகிறது.

கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சியானது வீடு வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான தகவல்கள் முதல், வங்கிக் கடனும் ஆலோசனையும் ஒரே இடத்தில் அளித்து பல மக்களின் கனவு இல்லத்தை நனவாக்குகிறது. பாரத ஸ்டேட் வங்கி இந்த கண்காட்சியின் முக்கிய ஸ்பான்சர்களாக உள்ளது என்றனர்.

மேலும் படிக்க