• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் 26ஆம்தேதி ரஷ்ய நாட்டு கல்வி கண்காட்சி

July 23, 2022 தண்டோரா குழு

இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியில் துறை என்பது தற்போது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்த துறைகளுக்காக கல்லூரிகளில் இடங்கள் கிடைப்பது தற்போது உள்ள கால கட்டத்தில் கடினமான இருக்கின்றது.

இந்நிலையில் மாணவர்களுக்கு இந்த துறைசார்ந்த படிப்புகள் எளிதாக கிடைக்கும் விதமாக ஸ்டடி அப்ராடு அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுரேஷ் பாபு, மற்றும் ரஷ்ய நாட்டின் வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தின் முதல்வர் டெனிஸ் கோவ்ரிஷ்னிக் ஆகியோர் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்

ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், இனைந்து ரஷ்ய கல்வி கண்காட்சி 2022 என்ற கண்காட்சியை கோவையில் நடத்த திட்டமிட்டு, வரும் 26ஆம்தேதி,அவினாசி சாலையில் உள்ள ரத்னா ரிஜென்ட்-ல் நடக்க இருப்பதாகவும், இந்த கண்காட்சியில், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில், சேர்வதற்கான தகுதியுடைய மாணவர்களுக்கு இக்கண்காட்சியில் உடனுக்குடன், அட்மிஷன் வழங்க இருப்பதாகவும், இதில், 70 க்கும் மேற்பட்ட ரஷ்ய பல்கலைக்கழகங்கள், நேரடியாக கலந்து கொள்ள உள்ளது எனவும் தெரிவித்தனர்.

இது ரஷ்ய நாட்டில் மருத்துவம், மற்றும் பொறியியல் துறையில் மாணவர்கள் பயில நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க