• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு அலுவலர்கள்

July 21, 2022 தண்டோரா குழு

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி போட்டியானது துவங்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு பேனர்கள் மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் செஸ் விளையாடினர்.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியாரும் சதுரங்கம் விளையாடினர்.
இதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் சதுரங்கம் விளையாடினர்.மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செஸ் ஒலிம்பியாட் 2022 லோகோ வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க