• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

July 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் தொழில் மேம்பாட்டிற்காக வங்கிக்கடன் வழங்கும் திட்டம் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தினசரி மார்க்கெட், வாரச்சந்தை, பூங்கா, ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில் சுற்றுப்பகுதி மற்றும் கடை வீதி பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கென பிரத்யேகமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக வங்கிகள் மூலம் மாதத்தவணை ரூ.946 வீதம் 12 மாதங்களுக்கு திருப்பிச்செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 9550 சாலையோர வியாபாரிகள் பயன் பெற்றுள்ளனர். தகுதியுள்ள நபர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் வார நாட்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை வரும் 16ம் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் விபரங்களுக்கு சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் அலைபேசி எண்- 99449 48878 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே ரூ.10 ஆயிரம் கடன் பெற்று முறையாக திருப்பி செலுத்தி முடித்தவர்கள் ரூ.20 ஆயிரம் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க