• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வை 5400 பேர் எழுதுகிறார்கள்

July 17, 2022 தண்டோரா குழு

கோவையில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற் கான நீட் என்ற நுழைவுத்தேர்வு மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக நடந்தது. நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது.கோவை மாவட்டத்தில் நீட் தேர்வை 5400 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதில் கோவை சவுரி பாளையம் கேந்திரிய வித்யாலயா பள்ளி கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி – ஆதித்யா கல்லூரி – ரத்னவேல் சுப்பிரமணியம் கல்லூரி – கற்பகம் அகாடமி உள்ளிட்ட மையங்களில் தேர்வு எழுதுகினரனர்.

கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குவதால் தேர்வு மையத்துக்குள் காலை 11 மணி முதல் மாணவ -மாணவிகள் அனுமதிக் கப்படுவார்கள். கூட்டம் கூடுவதை தவிர்க்க ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரப்படி தேர்வு அறைக்கு வர வேண்டும். புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட், அரசு வழங்கிய அடை யாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் கிருமிநாசினி மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை கொண்டுவர வேண்டும்.

மேலும் தேர்வு மையத்துக்குள் மின்னணு பொருட்கள் கொண்டுவர அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வரக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பறக்கும் படை அதிகாரிகளும் அவ்வப்போது தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க