• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கற்பகம் பல்கலை கழகத்தில் ஒருநாள் ஐஏஎஸ் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி

July 14, 2022 தண்டோரா குழு

கற்பகம் பல்கலை கழகத்தின் வழிகாட்டுதல் மற்றும் போட்டித் தேர்வுக்கான மையமும் தீரன் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ஒரு நாள் ஐஏஎஸ் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி பல்கலைக்கழகத்தில் சேரமான் பெருமான் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தீரன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் ஆர்.சக்தி பார்த்திபன் தலைமை வகித்தார். அவர் இந்தியா ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெறுவதற்கான நுழைவாயில் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் ஐஏஎஸ் தேர்வுத் திட்டம், தேர்வுக்கான பாடத் தேர்வு, தயாரிக்கும் முறை மற்றும் ஐஏஎஸ் தேர்வு தொடர்பான பல்வேறு வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 156 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இவ்விழாவை வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.ஜோதி வரவேற்புரை வழங்கினார். பல்கலை கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பி.வெம்கடாசலபதி விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியை பொறியியல் துரையின் முதன்மையர் முனைவர் ஏ.அமுதா அவர்கள் வாழ்த்திப் பேசினார். தீரன் ஐஏஎஸ் அகாடமி ஆசிரியர் கிரிதாரி நாகராஜன் அவர்கள் அமர்வை வழிநடத்தினார்.ஒருங்கிணைப்பாளர் முனைவர். இ.சிவசெந்தில் நன்றி கூறினார்.

மேலும் படிக்க