• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

July 9, 2022 தண்டோரா குழு

கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆசிக் (24). இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் 9ம் வகுப்பு படித்து வந்த 2 மாணவிகளை ஊட்டிக்கு கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த 2 மாணவிகளும் அங்கிருந்து தப்பித்து கோவை வந்து தங்கள் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிக்கை கைது செய்தனர்.

அவர் மீது கடத்திச்செல்லுதல், போக்சோ ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிக்குக்கு மாணவிகளை கடத்திச்சென்ற பிரிவுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ பிரிவுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் ஆசிக்கை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க