• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி அருகே நெகமத்தில் நாய் குறுக்கே வந்ததால் கார் விபத்து

July 8, 2022 தண்டோரா குழு

பொள்ளாச்சி கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி வயது 65, இவரும் இவரது மகனும் நேற்று முன்தினம் நெகமம் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு வந்து பணிகளை முடித்துவிட்டு இரவு தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக கோவில்பாளையம் ரோட்டில் வந்து கொண்டு இருக்கும் போது காணியாலாம்பாளையம் பிரிவு அருகே ரோட்டின் குறுக்கே நாய் ஓடி வந்ததால் காரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மின்சார கம்பம் மீது மோதியது. இதில் மின்சார கம்பம் இரண்டாக முறிந்தது கார் மின் கம்பம் மீது ஏறி நின்றது. உடனடியாக மின்சார வாரியம் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டது ஆட்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.நேற்று காலையில் புதிய மின் கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க