• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விபத்து நேரங்களில் பாதுகாத்து கொள்வது குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி

July 1, 2022 தண்டோரா குழு

விபத்து நேரங்களில் பாதுகாத்து கொள்வது குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சிகை நடத்தினர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட தெற்கு தீயணைப்பு துறையினர், விபத்து நேரங்களில் நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, விபத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு மீட்பது குறித்தான ஒத்திகையை நடத்தினர்.

இதில் எவ்வாறான பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் உள்ளன என்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு துறையினரிடம் உள்ள தொழில்நுட்ப பொருட்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
தெற்கு தீயணைப்பு நிலை அலுவலர் வேலுச்சாமி இவற்றை குறித்து விளக்கமளித்தார்.

மேலும் விபத்துகள் ஏற்படும் போது உடனடியாக காவல்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்க வேண்டுமென கேட்டுகொண்டார்.இந்த ஒத்திகை நிகழ்ச்சியை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

மேலும் படிக்க