• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா? கோவை மத்திய சிறையில் போலீசார் ‘திடீர்’ சோதனை

June 29, 2022 தண்டோரா குழு

கோவை சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

கோவை மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்துக்குள் செல்போன் மற்றும் பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை சிறைக்காவலர்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் சிறை வளாகத்துக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை சிலர் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் சோதனை நடத்தினர்.

அவர்கள் கைதிகள் உள்ள அறை, கழிவறை மற்றும் அவர்களது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். இன்று காலை 6 மணி முதல் சில மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. போலீசாரின் இந்த திடீர் சோதனையால் சிறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க